வரலாற்றின் சிறந்த பயன், வரலாற்றின் வழி நின்று மாபெரும் வரலாறு படைப்பதே. அவ்வகையில் சோழர்களின் பெருமைகளை உலகெங்கும் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த சோழர்கள் கண்காட்சியை தொடங்க உள்ளோம். இது பல்லவர், பாண்டியர், சேரர் என விரியவும் செய்யும்.
‘இருப்பதைக் காப்பது, இழந்தவற்றை மீட்பது, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது’ எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட எமக்கு கடந்த 12 ஆண்டுகள் சவாலானவை. இதில் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவம், களரி-வர்மம் போன்ற துறைகளில் புதிய நோக்கில் சில சாதனைகளை ஆய்வாகவும், பொதுப்பணியாகவும் செய்துள்ளோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையரின் சிறப்புகளான ஆட்சித்திறன், கடல் வாணிப சாதனைகள், நீர் மேலாண்மை, கட்டடக்கலை, கலை-கலாச்சாரம், அரசியல், உள்ளாட்சி அமைப்பு, உயர்ந்த ஜனநாயகம், வாழ்க்கை நெறி, உணவு முறைகள், பரந்த பண்பாட்டுத் திறன், கொடைத்தன்மை, போர்த்திறன்...என விரிந்து கொண்டே செல்லும் சிறப்புகளை முடிந்த அளவு அவ்வப்போது எடுத்துச் சொல்லியும் வந்தோம். அதன் நீண்ட வடிவாக ஒருமித்த சாதனையாக தற்போது ஓரிடத்தில் பிரமாண்ட வளாகத்தில் தனித்தனி சாதனை அரங்கில் சோழர்களின் அருமைகளைக் காட்சிப்படுத்தும் பணிகளை முனைப்போடு செய்தும் வருகிறோம்.
பழமை என்பதால் புனைவுகள் ஏதும் இன்றி, கிடைத்த வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் உள்ளதை உள்ளபடி ஆய்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வரலாற்று ஆய்வாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், சிறந்த கலைஞர்கள், சித்த மருத்துவ - களரி - வர்ம பேராசான்கள், மரபியல் இசை - கூத்து ஆசான்கள்... என பரந்துபட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளுடன் இந்த சோழர்கள் கண்காட்சி அமையவுள்ளது. இவர்களின் வழிகாட்டலில் நாம் இதுவரை அறிந்து கொள்ளாத சோழர்களின் பல பரிமாணங்களும் அறிந்து கொள்ளவிருக்கிறோம்.
‘சோழ தேசம்’ -என்ற தலைப்பில் அமையவிருக்கும் இந்தக் கண்காட்சியின் மையக் கருவாக... தமிழரின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் மாமன்னர் ராஜராஜ சோழப் பெருவுடையாரை முன்னிலைப்படுத்தி பல அரங்கங்கள் அமையவுள்ளன.
உலகமெங்கும் நாடோடிகளாக மக்கள் கூட்டம் திரிந்து வந்த வேளையில் பார் புகழும் பண்பாட்டோடு வாழ்ந்த நம் குலத்தின் பெருமைகளை முழுவதுமாய் எடுத்துச் சொல்ல ஓவியங்கள், கல்வெட்டு மாதிரிப் படிமங்கள், சுவடிகள், மன்னர்களின் மாதிரி உருவங்கள், சோழர்களின் பெருமை சொல்லும் புத்தகங்கள், பண்டைய உணவு வகைகள்..என இயன்றவரை சகலத்தையும் உங்களுக்குக் காட்சி படுத்த விரும்புகிறோம். இந்தக் கண்காட்சி, சிறியவர்கள், பெரியவர்கள், வரலாற்று ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெருவிருப்பம் கொண்ட ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம்.
பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுப்போட்டி விளையாட்டுக்கள், கல்வெட்டு, ஓலைச்சுவடி, களரி-வர்மம் போன்ற அடிப்படை பயிற்சி வகுப்புக்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம். அரங்கில் வணிக அங்காடிகளாக சுமார் 300 ஸ்டால்களும் இடம்பெற்றிருக்கும்.
உணவு-குடிநீர் வசதி, வாகன நிறுத்த வசதி, கழிப்பிட வசதி மற்றும் சகலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டதாக இந்த சோழர்கள் கண்காட்சி அமைந்து இருக்கும்.
வரலாற்றைத் தொலைத்த இனம், வரலாற்றில் நிலைப்பதில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. யாமறிந்த வரலாற்று நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த கண்காட்சி பயன்படும் என்று விரும்புகிறோம். வாருங்கள்! விரைவில் ஆலவாய் நகரில் சங்கமிப்போம். சோழர்களின் வழியே தமிழர்களின் தொன்மையைக் காண்போம்!
காட்சிப் படுத்தப்பட உள்ளன
காட்சிப் படுத்தப்பட உள்ளன
பரதநாட்டியம்
பாரம்பரிய நடனம்
பாரம்பரிய போர்க்கலை களரி & வர்ம
இசை விருந்து
வரலாற்று நாடகங்கள்
சிறப்பு பேச்சாளர்கள் உரை
விருது வழங்கும் விழா
மற்றும் பல நிகழ்ச்சிகள்...
50 க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்சுவை உணவு மற்றும் சிற்றுண்டிகள்.
Director
Director/Researcher
Public Relation
Project Analyst
Technology & Design
Graphic Designer
Project Analyst
Art Director
President Rotary Club, Srilanka
Rtd. Archeology Officer - Dept. of Archeology Tamil Nadu Government
Project Management
Media
Rtd. Researcher
ICMR
Public Relation